Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தினகரன் கட்சி வேட்பாளர்கள் நாளை அறிவிப்பு

மார்ச் 14, 2019 06:36

சென்னை: பாராளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 38 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஒரு தொகுதியை கூட்டணி கட்சியான எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு ஒதுக்கி உள்ளது. 

வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்து இருந்தார். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் தினகரன் தீவிரமாக ஈடுபட்டார். 

இந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் என்று தெரிகிறது. 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் 2-ம் ஆண்டு விழா நாளை காலை சென்னை அசோக் நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கிறது. இதில் தினகரன் கலந்து கொண்டு கட்சி கொடி ஏற்றுகிறார். இந்த விழாவின்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்களை தினகரன் அறிவிப்பார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்